எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.
விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.
தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது தேடல் மட்டுமே.
Monday, May 11, 2009
சில்லறை சித்தாந்தம் !


0 comments:
Post a Comment